கூடுவாஞ்சேரி அருகே டாஸ்மாக் கடை பார் ஊழியரை வெட்டிய 4 பேர் கைது..!

0 3886

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே, மது மற்றும் பணம் கேட்டு தர மறுத்த அரசு டாஸ்மாக் கடை பார் ஊழியரை கடைக்குள் புகுந்து வெட்டிவிட்டு தப்பியோடிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாண்டூரில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் பணியாற்றும் ஊழியர்கள் அங்கேயே தங்கியிருக்கும் நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று இரவு 4 பேர் கொண்ட கும்பல் கடைக்கு வெளியே நின்றுக் கொண்டு மது மற்றும் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

ராமச்சந்திரன் மறுக்கவே, கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற கும்பல் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளால் அவரை தலை, கால் என சரமாரியாக வெட்டி தள்ளிவிட்டு, கல்லாப்பெட்டியில் இருந்த மூவாயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு தப்பியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த ராமச்சந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை நடத்திய கூடுவாஞ்சேரி போலீசார் பிரவீன், கர்ணன், ஆகாஷ், ராஜேஷ் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments