சென்னை ஐஐடியில் மாணவர்களின் மரணத்தை மறைக்க முயற்சிப்பதாக கூறி நள்ளிரவில் மாணவர்கள் போராட்டம்

0 2625

சென்னை ஐஐடியில் தொடரும் மாணவர்களின் உயிரிழப்புகளை மறைக்க முயற்சிப்பதாக கூறி மாணவர்கள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஐஐடியில் முனைவர் பட்டத்திற்காக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சச்சின் குமார் என்ற மாணவர் வேளச்சேரியில் உள்ள அவரது வாடகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்,

இவ்விவகாரம் தொடர்பாக வேளச்சேரி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை ஐஐடி வளாகம் முன்பாக 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சச்சின் மரணத்திற்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி நள்ளிரவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments