கோவிஷீல்டு உற்பத்தியை மீண்டும் துவக்கியது சீரம் நிறுவனம்

0 1426

அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்திற்கொண்டு, கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியை சீரம் நிறுவனம் மீண்டும் தொடங்கி உள்ளது.

நேற்று புதிதாக 7 ஆயிரத்து 830 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும், அடுத்த 90 நாட்களுக்குள் 70 லட்சம் கோவிஷீல்ட் டோஸ்கள் வரை தயாரிக்கப்படும் என்றும் சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அடார் பூனாவாலா தெரிவித்தார்.

60 லட்சம் கோவோவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி இருப்பில் உள்ளதாகவும், இளைஞர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ள முன்வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments