புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து,காவல் நிலையம் அருகிலுள்ள மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த திருநங்கை..!

0 1647

கேரள மாநிலத்தில் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து, திருநங்கை ஒருவர் மரத்தின் கிளையில் அமர்ந்துக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

ஆலுவா பகுதியைச் சேர்ந்த திருநங்கை அண்ணா ராஜுவை, பிற மாநில திருநங்கைகள் தாக்கியதாகவும், இதுதொடர்பாக ஆலுவா காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை போலீஸார் கண்டுகொள்ளவில்லையெனவும் கூறப்படுகிறது.

இதனால், காவல் நிலைய வளாகத்தில் உள்ள மரத்தின் மீது ஏறிய திருநங்கை, சுமார் 30 அடி உயரத்திலுள்ள கிளையில் அமர்ந்துக்கொண்டு, தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

பின்னர் தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு, ஏணி மூலமாக அவர் பத்திரமாக கீழே இறக்கப்பட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments