ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மாடியிலிருந்த ஏசி இயந்திரம் கழன்று விழுந்ததில் ஊழியர் உயிரிழப்பு..!

0 2324

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மாடியிலிருந்த ஏசி இயந்திரம் கழன்று, கீழே நடந்துச்சென்றுக்கொண்டிருந்த மருத்துவமனை ஊழியரின் தலையில் விழுந்ததில் அவர் உயிரிழந்தார்.

சிந்தாதிரிப்பேட்டையைச்சேர்ந்த திருநாவுக்கரசு, அரசு பொது மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு திட்ட பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார்.

மதிய வேளையில் பணியை முடித்து விட்டு வீட்டிற்கு செல்வதற்காக நடந்துச்சென்ற போது, இரண்டாவது டவரின் மூன்றாவது மாடியில் மாட்டப்பட்டிருந்த ஏசி இயந்திரம் கழன்று விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில், தலையில் பலத்த காயமடைந்த திருநாவுக்கரசை அங்கிருந்தவர்கள் மீட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments