சட்டப்பேரவையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திரைகளில் தனது முகம் வருகிறதா என பார்த்துக்கொண்டே பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்..!

0 1890

சட்டப்பேரவையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திரைகளில் தனது முகம் வருகிறதா என பார்த்துக்கொண்டே பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

சட்டப்பேரவையில் e-book முறை புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி உறுப்பினர்களின் கேள்வியும், அதற்கு அமைச்சர்கள் கூறும் பதிலும், உறுப்பினர்களுக்கு முன் உள்ள தொடுதிரை கணினியிலும், பேரவையில் உள்ள 4 பெரிய திரைகளிலும் முதன்முறையாக காட்டப்பட்டது.

இந்நிலையில் துணைக் கேள்விக்காக எழுந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தனது பேச்சினூடே பெரிய திரைகளில் அவரது உருவமும் வருகிறதா என பார்த்துக் கொண்டே பேசினார்.

திண்டுக்கல் சீனிவாசனின் செயலைப் பார்த்த சபாநாயகர் அப்பாவு, உங்க படம் எல்லா திரையிலும் வந்துள்ளது என்றார். அதற்குப் பதிலளித்த திண்டுக்கல் சீனிவாசன், "எங்களுக்கு பக்கமா இருக்கிறது அதான் பார்த்து பேசுறேன்" என்றதும் சிரிப்பலை எழுந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments