பஞ்சாபில் ராணுவ மையத்திற்குள் புகுந்து அதிகாலையில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் பலி

0 1366

பஞ்சாப் மாநிலம் பதின்டாவில் உள்ள ராணுவ முகாமுக்குள் இன்று அதிகாலை 4.30 மணியளவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 4 வீரர்கள் பலியாகினர்.

இதையடுத்து ராணுவ முகாமில் உள்ள 4 நுழைவு வாயில் கதவுகளும் மூடப்பட்டு, தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. தாக்குதலை நடத்தியது யார் என இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் இல்லை. 

ராணுவ முகாமில் இருந்து சில தினங்களுக்கு முன்பு துப்பாக்கியும், தோட்டாக்களும் காணாமல் போன நிலையில், அதைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தீவிரவாத சம்பவம் இல்லை என  காவல்துறை தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments