கூடுதல் மனிதாபிமான உதவிகளைக் கோரி பிரதமர் மோடிக்கு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடிதம்

0 1700

கூடுதல் மனிதாபிமான உதவிகளைக் கோரி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா வந்த உக்ரைன் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் எமினே ட்ஜபரோவா, பிரதமர் மோடிக்கு, ஜெலன்ஸ்கி எழுதிய கடிதத்தை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகியிடம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்பட கூடுதல் மனிதாபிமான உதவிகளை உக்ரைன் கோரியதாகவும், மனிதாபிமான உதவிகளை செய்ய இந்தியா உறுதி செய்துள்ளதாகவும் இணையமைச்சர் மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments