கம்போடியாவில் இருந்தபடி ஆன்லைன் மோசடி.. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 19 பேர் கைது..!

0 2419

கம்போடியாவில் இருந்தபடி ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டுவந்த ஜப்பான் நாட்டைச்சேர்ந்த 19 பேர், ஜப்பானுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

ஜப்பான் நாட்டு மூத்த குடிமக்களை குறிவைத்து, அவர்களிடம் இணையதள சந்தா காலவதியாகப்போவதாகக்கூறி, வங்கிக்கணக்கிலிருந்த பணத்தை திருடி வந்த கும்பல், கம்போடியாவில் பதுங்கியிருப்பது ஜப்பான் போலீசாருக்கு தெரியவந்தது.

அவர்கள் அளித்த தகவலின்பேரில், ஜப்பானை சேர்ந்த அந்த 19 பேரையும் கைது செய்த கம்போடிய நாட்டு போலீசார், பலத்த பாதுகாப்புடன் விமான நிலையம் அழைத்துவந்து, தனி விமானத்தில் ஜப்பானுக்கு அனுப்பிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments