தமிழகத்தில் போலி மருத்துவர்களை கண்டறிய சிறப்பு சோதனை.. கடந்த 3 நாட்களில் 51 போலி மருத்துவர்கள் கைது

0 2527

தமிழகத்தில் போலி மருத்துவர்களை கண்டறியும் பணிகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை செயலர் உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, கடந்த 3 நாட்களில் 51 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி மருத்துவர்கள் அதிகரிப்பதாக புகார்கள் எழுந்ததை அடுத்து காவல் துறையினரும் மருத்துவ துறையினரும் இணைந்து தமிழகம் முழுவதும்  சோதனை நடத்தி வருகின்றனர்.

கிளினிக்குகள், சிறிய மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான போலி மருத்துவர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 15 பேரும், திருவாரூர் மாவட்டத்தில் 10 பேரும், தஞ்சாவூரில் கைது பேரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments