ராஜஸ்தான் மாநிலத்தின் முதலாவது வந்தே பாரத் ரயில் சேவையை நாளை தொடங்கி வைக்கிறார்பிரதமர் மோடி!

0 5241

ராஜஸ்தான் மாநிலத்தின் முதலாவது வந்தே பாரத் ரயில் சேவையை, பிரதமர் மோடி நாளை காணொலிக் காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.

ராஜஸ்தானின் அஜ்மீர் - டெல்லி கண்டோன்மென்ட் இடையேயான தொலைவினை இந்த ரயில் 5 மணி 15 நிமிடங்களில் சென்றடையும்.

தற்போது இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை விட ஒரு மணிநேரம் முன்னதாகவே இந்த ரயில் பயணத்தை நிறைவு செய்வதுடன், புஷ்கர், அஜ்மீர் ஷரிஃப் தர்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களை இந்த ரயில் இணைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக நாளை ஜெய்பூர் - டெல்லி கண்ட்டோன்மெட் ரயில் நிலையங்கள் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments