கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்..!

0 1318

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியான அத்திப்பள்ளியில் கர்நாடக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மே மாதம் 10ம் தேதி கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அத்திப்பள்ளி சுங்கச்சாவடி அருகே கர்நாடக போலீசார், துணை ராணுவத்தினருடன் இணைந்து தமிழகத்திலிருந்து வரும் வாகனங்களை தீவிர சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

தேர்தலை முன்னிட்டு பணம், பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா என்பதை கண்டறியும் நோக்கில் இச்சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments