ஜார்கண்ட் மாநிலத்தில் மதக்கொடி எரிக்கப்பட்டதால் இரு தரப்பினரிடையே மோதல்.. கடைகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம்!

0 1926

ஜார்கண்ட் மாநிலத்தில் மதக்கொடி எரிக்கப்பட்டதால் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது.

ஜாம்ஷெட்பூரில் உள்ள சாஸ்திரி நகர் பகுதியில் ஒரு பிரிவினரின் மதக்கொடி எரிக்கப்பட்டதாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து இரு பிரிவினரும் மாறி மாறி கற்களால் தாக்கிக் கொண்டனர். மேலும் கடைகளுக்கும், வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.

போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுப்படுத்தினர். குறிப்பிட்ட பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பாதுகாப்பு பணிகளுக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments