இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த நபரை சுட்டுக்கொன்றது இந்திய ராணுவம்..!

0 1520

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், இந்திய எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை முறியடித்த இந்திய ராணுவத்தினர், எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த நபரை சுட்டுக்கொன்றனர்.

இன்று அதிகாலை, Shahpur பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாட்டம் இருந்ததை அடுத்து, பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பயங்கரவாதி ஒருவன் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், இரண்டு பேர் காட்டிற்குள் தப்பிச்சென்ற நிலையில், அப்பகுதியை சுற்றி வளைத்து ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments