ராஜஸ்தானில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி

0 1281

ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் மீண்டும் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

2018ம் ஆண்டு தேர்தலின்போது பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியை பூர்த்தி செய்ய வேண்டியது காங்கிரஸின் கடமை என்று தெரிவித்துள்ள சச்சின் பைலட்,   வசுந்தரா ராஜே தலைமையிலான முந்தைய பாஜக அரசு ஊழல் புரிந்துள்ளதாக கெலாட் பேசுவது தொடர்பான பழைய வீடியோவையும் வெளியிட்டார்.

மேலும் முந்தைய பாஜக அரசுக்கு எதிராக ஆதாரம் இருந்தும், நடவடிக்கை எடுக்காததால் வருகிற 11 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக சச்சின் பைலட் அறிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments