சிஆர்பிஎப் ஆட்சேர்க்கைக்கான கணினித் தேர்வு அறிவிக்கை தொடர்பாக அமித் ஷாவுக்கு முதலமைச்சர் கடிதம்..!

0 1220

சிஆர்பிஎப் ஆட்சேர்க்கைக்கான கணினித் தேர்வை தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் நடத்தும் வகையில், அறிவிக்கையில் மாற்றங்களை செய்யக்கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், சிஆர்பிஎப் ஆட்சேர்க்கைக்கான கணினித் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டின் ஒவ்வொரு இளைஞரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சிஆர்பிஎப் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் 9212 காலி பணியிடங்களில், 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்ப இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும்,ஆனால் தமிழ்நாட்டில் இருந்து தேர்வுக்கு விண்ணப்பிப்போர் சொந்த தாய்நாட்டிலேயே தாய்மொழியில் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments