இஸ்ரேல் - சிரியா நாடுகளில் ராக்கெட் மற்றும் பீரங்கித் தாக்குதல்..!

0 1920

தங்கள் நாட்டில் ஏவுகணை வீசி தாக்கப்பட்டதற்கு பதிலடியாக சிரியா நாட்டின் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

அல்-அக்ஸா மசூதியில் இஸ்ரேல் ராணுவம் சோதனை நடத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாலஸ்தீனம் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பினர் 30 ராக்கெட்டுக்களை ஏவியதைத் தொடர்ந்து சிரியாவும் இஸ்ரேல் மீது 6 ராக்கெட் ஏவுகணைகளை ஏவி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

இரண்டு நாடுகளின் தாக்குதலைத் தொடர்ந்து தங்களது ராணுவத்தை எல்லைப் பகுதியில் குவித்துள்ள இஸ்ரேல் பல்வேறு பகுதிகளில் பதிலடி கொடுத்து வருவதால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments