கோயம்பேட்டில் இளைஞரை தாக்கி 9 சவரன் நகை மற்றும் 10 ஐபோன்கள் பறிப்பு - இருவர் கைது... விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்

0 4172
கோயம்பேட்டில் இளைஞரை தாக்கி 9 சவரன் நகை மற்றும் 10 ஐபோன்கள் பறிப்பு - இருவர் கைது... விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்

சென்னை கோயம்பேட்டில் நின்றிருந்த இளைஞரை தாக்கி 9 சவரன் நகை மற்றும் 10 ஐபோன்களை பறித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சியை சேர்ந்த முகமது அஸ்வர், தனது கடையில் வேலை பார்த்துவந்த முகமது அல்பான் என்பவரிடம் 9 சவரன் தங்கச் செயின் மற்றும் 10 ஐபோன்களை கொடுத்து அனுப்பி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு கடையில் கொடுக்குமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து கடந்த 6ந்தேதி சென்னை கோயம்பேடு வந்த முகமது அல்பானை, காரில் வந்த 3 மர்மநபர்கள் தாக்கி நகை மற்றும் ஐபோன்களை பறித்து தப்பிச் சென்றனர். புகாரின்பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி, திருச்சி சென்ற தனிப்படை போலீசார், ஏற்கனவே அஸ்வரிடம் வேலை பார்த்து வந்த அஷ்ரபுதின் உட்பட 2 பேரை செய்து, 190 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 ஐபோன்களை பறிமுதல் செய்தனர்.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை விட அதிகமாக இருந்ததால், அஸ்வரின் விசாரணை மேற்கொண்ட போது, வெளிநாடுகளில் இருந்து குறைந்த விலைக்கு தங்கம் மற்றும் ஐபோன்களை அஸ்வர் வாங்கிவந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments