மும்பை - அகமதாபாத் இடையே 21 கி.மீ நீளத்திற்கு கடலுக்கு அடியில் புல்லட் ரயில்!

0 1966

மும்பையில் இருந்து அகமதாபாத் வரை இயக்கப்பட உள்ள இந்தியாவின் முதல் புல்லட் ரயில், 21 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை வழியாக தண்ணீருக்குள் பயணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஜப்பானின் ஷின்கான்சென் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இத்திட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதுவரை 26 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப் படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் இந்தியாவில் தண்ணீருக்குள் பயணிக்கும் அனுபவத்தை பயணிகள் பெற முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments