தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படவில்லை - தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்!

0 1617

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கனிமவளங்கள் கடத்தப்படவில்லை என்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலையில் தமிழக -கேரளா எல்லையில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் துரை ரவிச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் பேசிய அவர், தமிழக கேரளா எல்லை புளியரை வழியாக கனிமவளங்கள் கடத்தப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார். 

இதுவரை கனிம வளங்கள் கடத்தல் நடைபெறவில்லை என்றும்,முறையான அனுமதி பெற்றுத்தான் கொண்டு செல்லப்படுகிறது என்றும் அவர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments