பிரதமர் மோடி வருகையால் உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை..!

0 1539

நாளை பிரதமர் மோடி சென்னை வருவதையொட்டி, விமான நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகைகள் நடைபெற்றன. பிற்பகல் 2.45 மணியளவில் சென்னை வரும் பிரதமர் மோடி, பழைய விமான நிலையம் கேட் எண் 6Aல் இருந்து புதிய முனையம் திறப்பு விழா நடக்க இருக்கும் இடத்திற்கு கார் மூலம் செல்ல உள்ளார்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக ஐ.என்.எஸ் கடற்படை தளத்திற்குச் செல்லும் பிரதமர், அங்கிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் செல்கிறார். இதற்கான பாதுகாப்பு ஒத்திகையில் போலீசார் ஈடுபட்டனர்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைக்கவுள்ள நிலையில், மோப்பநாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியோடு ரயில் நிலையம் முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுப்பட்டனர்.

வரும் 9ஆம் தேதி மைசூருவிலிருந்து பிரதமர் மோடி தெப்பக்காடு வந்து செல்லவுள்ளதை ஒட்டி, மசினகுடியில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஹெலிகாப்டரை தரையிறக்கி ஒத்திகை பார்க்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments