வாகனம் மோதி அடிபட்டு சாலையில் சுருண்டு கிடந்த பசுமாட்டை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் அமைச்சர் நாசர்..!

0 1663

சென்னை திருமுல்லைவாயில் அருகே, சாலையில் அடிபட்டுக் கிடந்த பசுமாட்டை மீட்டு அமைச்சர் நாசர் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

திருமுல்லைவாயில், பட்டாபிராம், ஆவடி, திருவேற்காடு, உள்ளிட்ட பகுதிகளில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தல்களை திறந்து வைக்கச் சென்ற அமைச்சர் நாசர், திருமுல்லைவாயில் காவல் நிலையம் அருகே சரக்கு வாகனம் மோதி பசுமாடு ஒன்று அடிபட்டுக் கிடந்ததைப் பார்த்துள்ளார்.

உடனடியாகக் காரை நிறுத்தி இறங்கிய அமைச்சர், அங்கிருந்தவர்களின் உதவியுடன் மாட்டை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments