கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த ஓபிஎஸ் தரப்பு முடிவு...

0 1069

திருச்சியில் இம்மாதம் 24ம் தேதி முப்பெரும் மாநாடு நடத்த இருப்பதாக முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்துள்ளது.

சென்னை பசுமைவழிச் சாலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் பண்ருட்டி ராமசந்திரன் உள்ளிட்டோர், எம்ஜிஆர் , ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாள் மற்றும் அதிமுக பொன்விழாவை குறிப்பிடும் வகையில் திருச்சி மாநாட்டை முப்பெரும் விழாவாக நடத்த உள்ளதாக குறிப்பிட்டனர்.

பிரதமரை சந்திக்க தனக்கு இன்னும் நேரம் ஒதுக்கப்படவில்லை என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், வாய்ப்பு கிடைத்தால் நேரில் சந்திப்பேன் என்று கூறினார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த போவதாகவும், இனி எடப்பாடி பழனிசாமி அணி குறித்து தாங்கள் விமர்சிக்கவோ , பேசவோ மாட்டோம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments