அரசு காப்பகத்தில் இருந்து தப்பிய 6 சிறுமிகளில் 4 பேர் மீட்பு.. அஜாக்கிரதையாக இருந்த காப்பக உதவியாளர், பாதுகாவலர் பணியிடை நீக்கம்..!

0 1380

காஞ்சிபுரம் பிள்ளையார்ப்பாளையம் அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் இருந்து தப்பிய ஆறு சிறுமிகளில் நான்கு பேர் மீட்கப்பட்ட நிலையில், அஜாக்கிரதையாக இருந்ததாக காப்பக உதவியாளர் மற்றும் பாதுகாவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காதல் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி, குழந்தைகள் நலக் குழுமத்தினரால் மீட்கப்பட்டு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்ட சிறுமிகளில் 6 பேர் பாதுகாவலரின் அறைக்கதவை வெளிப்புறம் தாழிட்டுவிட்டு வியாழக்கிழமை அதிகாலை தப்பினர்.

சிறுமிகள் தீவிரமாக தேடப்படடு வந்த நிலையில், தங்களது வீடுகளுக்கு சென்ற இரண்டு சிறுமிகளை பெற்றோரே போலீசாருக்கு தகவல் அளித்து ஒப்படைத்ததாகவும், உறவினர்களின் வீடுகளுக்கு சென்ற மேலும் இரண்டு சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments