பொதுப்பணித்துறை செயல் பொறியாளர் அரசு வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.32.68 லட்சம் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை..!

0 1531

ராமநாதபுரம் மாவட்டம் பொதுப்பணித்துறை செயல் பொறியாளரிடம் இருந்து 32லட்சத்து 68ஆயிரம் ரூபாயினை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் கண்ணன், வரை தொழில் அலுவலர் குமரேசன் மற்றும் ஓட்டுநர் முனியசாமி ஆகியோர் அரசு வாகனத்தில் பணம் கொண்டு செல்வதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து அவர்கள் மூவரும் சென்ற அரசு வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற போலீசார் அரசு விருந்தினர் மாளிகையில் மடக்கி சோதனை செய்ததில் சிக்கியது. இந்த பணம் தொடர்பாக 3பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments