சென்னையில் 8 இடங்களில் கேரள மாநில என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை - ஒருவர் கைது!

0 2057

கேரள கடற்பகுதியில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தப்பட்ட வழக்கில், சென்னையில் எட்டு இடங்களில் கேரள என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

பாரிமுனை ஈவினிங் பஜார், முத்தியால் பேட்டை மற்றும் மண்ணடியிலுள்ள மூன்று தனியார் விடுதிகளிலும் சோதனை நடத்தி, போரூரைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரை கைது செய்தனர்.

இந்த சோதனையில் 300 கிராம் தங்கம், சுமார் ஒரு கோடி ரூபாய் ரொக்கப் பணம், 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஹவாலா பணப் பரிவர்த்தனையில் இலங்கை மற்றும் சென்னையைச் சேர்ந்த நபர்கள் குருவிகளாக ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments