கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்..!

0 1368

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணிகளை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கீழடி அருகே கொந்தகை, அகரம் உள்ளிட்ட கிராமங்களிலும் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டியிலும் இன்று அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கீழடி அருங்காட்சியகத்திற்கு வடிவமைக்கப்பட்டுள்ள கீழடி புனை மெய்யாக்க செயலியையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

 முன்னதாக, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய வருவாய் வட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திருக்கோவில்களில் நடைபெற உள்ள திட்டப்பணிகளுக்கு காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments