சென்னையில் ஏ.ஆர்.டி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை!

0 1601

சென்னையில் ஏ.ஆர்.டி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை நொளம்பூரை தலைமை இடமாகக் கொண்ட ஏ.ஆர்.டி நிறுவனம், நகைக்கடை, மால் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 12 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடமிருந்து முதலீடுகளை பெற்று மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் ஏ.ஆர்.டி குழுமத்தை நடத்திவந்த ஆல்பின் ஞானதுரை, ராபர்ட் ஆகியோரது வீடுகள், மற்றும் ஏர்.ஆர்.டி குழுமத்திற்கு தொடர்புடைய இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments