தெலங்கானாவில் பத்தாம் வகுப்பு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக, அம்மாநில பாஜக தலைவர் கைது..!

0 1810

பத்தாம் வகுப்பு இந்தி வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக, தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சையை, அவரது இல்லத்தில் வைத்து நள்ளிரவில் போலீசார் கைது செய்தனர்.

பாலகுர்த்தியில் உள்ள மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அவரை போலீசார் அழைத்துச்சென்ற நிலையில், காரை தடுத்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

பண்டி சஞ்சை கைதை கண்டித்து, பொம்மலா ராமராம் காவல் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் தொண்டர்களை போலீசார் தடுப்புக்காவலில் வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments