திருப்பூரில் கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்றுவந்த 82 வயது முதியவர் உயிரிழப்பு!

0 1772

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்றுவந்த 82 வயது முதியவர் உயிரிழந்த நிலையில், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கே.பி.சி.நகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி யம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சளி மற்றும் இருமல் காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த சுப்ரமணியம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments