அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக கோவை சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

0 2850

அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக கோவை சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

இதனையடுத்து, காளப்பாட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய இ.பி.எஸ்., கோவையில் சரிவர சாலை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்றும், அங்காங்கே தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமலேயே உள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

மேலும், கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அறிக்கை அதிமுக ஆட்சியிலேயே தயாரிக்கப்பட்டதாகவும், அத்திக்கடவு - அவிநாசி திட்டமும் தங்களது ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments