இஸ்ரேல் தாக்குதலில் பலியான ஈரான் வீரர்களின் உடலுக்கு இறுதிச்சடங்கு

0 1574

சிரியாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்த 2 ஈரானிய புரட்சிகர காவல் படையினருக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது.

கடந்த மார்ச் 31ம் தேதி சிரியாவின் டமாஸ்கஸ் அருகே இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில், ஈரானைச் சேர்ந்த 2 வீரர்கள் பலியாகினர். அவர்களது உடல் ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு கொண்டு வரப்பட்டு, இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

வீரர்களின் மரணத்திற்கு பழிக்கு பழி வாங்குவோம் என ஈரானிய புரட்சிகர காவல்படை கமாண்டர் ஹெசைன் சலாமி கூற, அங்கு திரண்டிருந்தவர்கள் அதே கூற்றை எதிரொலித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments