சென்னையில் மீண்டும் தீவிரமாகும் கொரோனா கட்டுப்பாடுகள்..!

0 29318

சென்னையில் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடு நடைமுறைகளை தீவிரப்படுத்தியுள்ள மாநகராட்சி, தொற்று பாதித்தோர் வீட்டுத் தனிமையில் இருப்பதை உறுதி செய்ய சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியான நிலையில், தமிழ்நாட்டிலும் கடந்த ஒரு வாரமாக 100க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதித்தவர்கள் வெளியில் நடமாடாமல் இருக்க, அவர்களின் வீட்டில் நோட்டீஸ் ஒட்ட சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாஸ்க் அணியவும், தொற்று அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments