ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே சிபிஐ-யின் முக்கிய பணி- பிரதமர் வலியுறுத்தல்

0 1373

சிபிஐ அமைப்பின் விசாரணை வட்டம் பலமடங்காக அதிகரித்தபோதிலும், ஊழலில்லாத நாட்டை உருவாக்குவதே அதன் முக்கிய பணியாக இருக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் சிபிஐ அமைப்பின் 60ம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, வழக்கு விசாரணைகளில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு அவர் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.

பின்னர் பேசிய பிரதமர் மோடி, 10 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் யார் அதிகம் ஊழல் புரிகிறார்கள் என போட்டி நிலவியதாகவும், அக்காலகட்டத்தில் மிகப்பெரிய ஊழல்கள் அரங்கேறியதாகவும், அந்த ஊழலில் ஈடுபட்டவர்கள் தங்களுக்கு அரசு நிறுவனங்கள் உறுதுணையாக இருந்ததால் அச்சப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

அதேநேரத்தில் 2014ம் ஆண்டுக்கு பிறகு தமது தலைமையிலான பாஜக அரசு, நாட்டில் ஊழலுக்கு எதிராகவும், கருப்பு பணத்துக்கு எதிராகவும் உறுதியான நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments