மசாஜ் சென்டருக்கு வந்த அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்.. ஊழியர் கைது!

0 2848

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே மசாஜ் சென்டருக்கு வந்த அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

அமெரிக்காவை சேர்ந்த 35 இளம் பெண் ஒருவர் ஆரோவில்லை சுற்றிப்பார்க்க சென்றுள்ளார். அப்போது சின்ன முதலியார்சாவடி கடற்கரை பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதியுடன் கூடிய மசாஜ் சென்டருக்கு மசாஜ் செய்துகொள்வதற்காக சென்றுள்ளார்.

அவருக்கு மசாஜ் செய்த நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ரெக்கீஸ் என்பவர், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கோட்டகுப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் அளித்த புகாரின் பேரில் ரெக்கீஸை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments