கோழிக்கோடு அருகே ரயிலில் சென்ற பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு.. 3 சடலங்கள் கண்டெடுப்பு

0 2790

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே ரயிலில் சென்ற பயணிகள் மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் 9 பேர் படுகாயமடைந்தனர்.

ஆலப்புழாவிலிருந்து கண்ணூர் நோக்கி சென்ற விரைவு ரயில் எலத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது டி1 கோச்சில் மர்ம நபர் ஒருவர் 2 பாட்டில்களில் வைத்திருந்த பெட்ரோலை பயணிகளின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதில் பெண்கள் உள்பட 9 பேர் தீக்காயம் அடைந்த நிலையில், கோழிக்கோடு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தில் நள்ளிரவில் ஒரு ஆண், பெண் மற்றும் குழந்தை என 3 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ரயிலில் இருந்து தப்பிக்க முயன்றபோது அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் சாலையில் நடந்துசென்று இருசக்கர வாகனத்தில் செல்லும் CCTVயில் பதிவான காட்சிகளை கைப்பற்றிய போலீசார் அவரை தேடி வருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments