ஆஞ்சநேயருக்கு மாலை போட்டுக்கொண்டு பள்ளி சென்ற மாணவனை வகுப்பில் சேர்க்க மறுத்து வீட்டுக்கு அனுப்பிய பள்ளி நிர்வாகம்

0 28025

தெலுங்கானாவில் ஆஞ்சநேயருக்கு மாலை போட்டுக் கொண்டு சென்ற மாணவனை பள்ளிக்கு வர தடை விதித்த நிர்வாகத்தின் செயலைக் கண்டித்து ஆஞ்சநேயர் பக்தர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அதிலாபத் மாவட்டம் உண்டூரில் இயங்கி வரும் செயிண்ட் பால் உயர்நிலை பள்ளியில் படிக்கும் 6ஆம் வகுப்பு மாணவன் அபினவ் ஆஞ்சநேயருக்கு மாலை போட்டு காவி ஆடை அணிந்த படி பள்ளி சென்றுள்ளான்.

இதனால் அபினவ்வை பள்ளிக்குள் அனுமதிக்க மறுத்த நிர்வாகம் சீருடையுடன் வருமாறு கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த ஆஞ்சநேய பக்தர்கள் விரைந்து சென்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பின்னர் பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கேட்டும் அபினவ் பள்ளிக்கு வரலாம் என்றும் கூறியதை அடுத்தும் போராட்டம் கைவிடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments