போராட்டத்துக்கு பணிந்தது கலாஷேத்ரா - பாலியல் தொந்தரவு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி

0 2780
போராட்டத்துக்கு பணிந்தது கலாஷேத்ரா - பாலியல் தொந்தரவு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி

சென்னை கலாஷேத்ரா நிர்வாகத்தில் உள்ள யாரேனும் பாலியல் வன்செயல் போன்ற  தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை திருவான்மியூரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய உத்தரவின்படி போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் ஹரி பத்மன், அலுவலர்கள் சஞ்சித் லால்,சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று போராட்டத்தில் குதித்தனர்.

இதையடுத்து அவர்களுடன் பேச்சுவர்த்தையில் ஈடுபட்ட கலாஷேத்ரா இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன், மாணவிகள் சிலர் புகார்களை தெரிவித்துள்ளதாகவும் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். இதனிடையே இன்றும் காலை முதல் கலாஷேத்ரா மாணவிகள் உள்ளிருப்பு போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments