அதிக வட்டி ஆசை காட்டி மோசடி செய்த ஏஆர்டி கோல்டு நிறுவனத்தின் பெண் ஊழியர் கைது

0 3203
அதிக வட்டி ஆசை காட்டி மோசடி செய்த ஏஆர்டி கோல்டு நிறுவனத்தின் பெண் ஊழியர் கைது

சென்னையில் பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி மோசடி செய்த ஏஆர்டி கோல்டு நிறுவனத்தின் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை நொளம்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த ஏ.ஆர்டி கோல்டு நிறுவனத்தின் மீதி பொது மக்கள் அளித்த புகாரின் பேரில் அதன் உரிமையாளர்களான ஆல்வின் ஆரோன் மற்றும் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடிவந்தனர்.

இந்நிலையில் இந்த நிறுவனத்தில் பணி புரிந்து வந்த பிரியா என்ற பெண்ணை நொளம்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பிரியா 4 லட்ச ரூபாய் முதலீடு செய்ததாகவும் பின்பு ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை சேர்த்து விட்டதாகவும், அதன்மூலம் கிடைத்த பணத்தில் முகப்பேரில் வீடுகட்டி வருவதாகவும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments