தென்னிந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்படும் உணவு இட்லி - ஸ்விகி

0 1778
தென்னிந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்படும் காலை உணவாக இட்லி உள்ளதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது.

தென்னிந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்படும் காலை உணவாக இட்லி உள்ளதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது.

உலக இட்லி தினமாக மார்ச் 30ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி தங்களிடம் கடந்த ஓராண்டில் ஆர்டர் செய்யப்பட்ட உணவுப்பட்டியல் விபரத்தை வெளியிட்டுள்ளது.

அதில், 3 கோடியே 30 லட்சம் பிளேட் இட்லி ஆர்டர் செய்யப்பட்டிருந்ததாகவும் பெங்களூர், ஹைதராபாத், சென்னை நகரங்களிலிருந்து அதிக ஆர்டர் வந்ததாகவும் ஸ்விக்கி தெரிவித்துள்ளது.

இதில், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே 6 லட்சம் ரூபாய்க்கு 8 ஆயிரத்து 428 பிளேட் இட்லிகளை தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்காக வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments