வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச்சாலையில் ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட 4 ஆட்டோ ஓட்டுநர்கள் கைது

0 1363

சென்னையை அடுத்த வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பந்தயம் வைத்து, ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார், ஆட்டோக்களையும் பறிமுதல் செய்தனர்.

பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில், இரவு நேரத்தில் சாலைகளில் ஆட்டோக்களை அதிவேகமாக ஓட்டிச்சென்று ரேஸில் ஈடுபட்டதும், பகல் நேரத்தில் ஒரு சக்கரத்தை தூக்கி ஆட்டோக்களை இயக்கி சாகசம் செய்ததும் தெரியவந்தது.

ரேஸில் ஈடுபட்ட அஸ்லாம் கான், சாலமன் தேவகுமார், அர்ஜூன், கோவிந்தராஜ் ஆகிய 4 ஆட்டோ ஓட்டுநர்களை கைது செய்து போலீசார் விசாரித்ததில், 5 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் வரை பந்தயம் வைத்து ரேஸில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments