கொரோனாவுக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு உண்டா என ஐசிஎம்ஆர் ஆய்வு

0 2118

கோவிட் பாதிப்புகளைத் தொடர்ந்து மாரடைப்பு மரணங்கள் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கான காரணம் குறித்து இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் தனி ஆய்வு நடத்திவருவதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக ஏற்படும் மரணங்கள் எண்ணிக்கை அதிகரித்ததற்கும் கொரோனாவுக்கும் தொடர்பு இருக்குமா என்று ஆராயப்படுகிறது.

அடுத்த இரண்டு மாதங்களில் ஆய்வறிக்கை வெளியாகும் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று 2ஆயிரத்து 151 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments