விந்து தானம் மூலம் 550 குழந்தைகளுக்குத் தந்தை ஆன நபர்..! உறவு முறைக்குள் புணர்ச்சி ஏற்படும் அபாயம்..!

0 20481

நெதர்லாந்தில், விந்து தானம் மூலம் 550 குழந்தைகளுக்கு தந்தையான நபர், இனி விந்து தானம் செய்ய தடை விதிக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உறவு முறைக்குள் புணர்ச்சி ஏற்படுவதை தடுக்க, ஒருவர் 12 பெண்களுக்கு மேல் விந்து தானம் செய்யக்கூடாது என்றும், 25 குழந்தைகளுக்கு மேல் தந்தையாக இருக்க கூடாது என்றும் நெதர்லாந்தில் சட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

ஜோனத்தான் ஜாக்கப் என்ற இசை கலைஞர், விந்து தானம் செய்துவருவதை மறைத்து 13 வெவ்வேறு மருத்துவமனைகளில் விந்து தானம் செய்துவந்துள்ளார்.

மேலும் இணையதளம் மூலம் சர்வதேச விந்து வங்கிகளுடனும் தொடர்பில் இருந்துள்ளார். உறவு முறைக்குள் புணர்ச்சி ஏற்படும் அபாயம் உள்ளதால், ஜோனத்தான் ஜாக்கபிடம் விந்தணுக்களை பெற்ற  பெற்றோர் 25 பேர், இனி அவர் விந்து தானம் செய்ய தடை விதிக்குமாறும், விந்து வங்கிகளில் சேகரிக்கப்பட்டுள்ள அவரது விந்தணுக்களை அழிக்க உத்தரவிடுமாறும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments