அமெரிக்கா- மெக்ஸிகோ எல்லையில் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழப்பு!

0 1043

அமெரிக்கா- மெக்ஸிகோ எல்லையில் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர். 

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்தவர்கள் மெக்ஸிகோ வடக்கு எல்லையில்தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் பலியான நிலையில், படுகாயமடைந்த 29 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தாங்கள் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்தில் புலம்பெயர்ந்தவர்களே தங்களின் மெத்தைகளை எரித்ததால் இந்த விபத்து நேரிட்டதாக மெக்ஸிகோ அதிபர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments