அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

0 1542

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காணொலி மூலம் திருவள்ளூர் மாவட்டம் காக்களூர், திருமுல்லைவாயல், நீலகிரி மாவட்டம் குன்னூர் உள்ளிட்ட இடங்களில் 15 கோடி ரூபாய் செலவில் முடிவுற்ற பணிகளையும் அவர் திறந்து வைத்தார்.

மேலும் தொழிற்பேட்டைகளில் மனை ஒதுக்கீடு பெற்ற தொழில் முனைவோர்களில் 5 ஒதுக்கீட்டாளர்களுக்கு பட்டாக்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments