மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி 2 இலக்குகளை நிர்ணயித்துள்ளார் - அமித்ஷா

0 2351

இந்தியாவை முழு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவது உள்ளிட்ட 2 இலக்குகளை மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி நிர்ணயித்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற ASSOCHAM's அமைப்பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை முழு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவது, 2025ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார சக்தியாக இந்தியாவை உருவாக்குவது ஆகிய 2 இலக்குகளை பிரதமர் நிர்ணயித்திருப்பதாக தெரிவித்தார்.

இந்த 2 இலக்குகளையும் நம்மால் நிச்சயம் அடைய முடியும் என்று தெரிவித்த அமித் ஷா, இதற்கான அடித்தளத்தை பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளில் அமைத்திருப்பதாகவும் கூறினார்.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையான 130 கோடி பேரை சிலர் சுமையாக கருதுவதாகவும், ஆனால் தாம் இதை மிகப்பெரிய சந்தையாக கருதுவதாகவும்  அமித் ஷா குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments