ஜே.சி.பி ஐ கொண்டு எம் சாண்ட், ரெட்டி மிக்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தின் நுழைப்பாதையில் குழிதோண்டி போராட்டம் நடத்திய பொதுமக்கள்..!

0 1718

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சென்னை பசுமை தீர்ப்பாயம் மூட உத்தரவிட்டும் தொடர்ந்து செயல்பட்டு வந்ததாக எம்.சாண்ட் ரெடி மிக்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தின் நுழைவுப்பாதையில் ஜேசிபியை கொண்டு பள்ளம் தோண்டி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

பிரம்மபுரம் பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்படும் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான நிறுவனத்திலிருந்து பகல் நேரங்களில் வெண்மை நிறத்தில் புகையும், இரவு நேரங்களில் கருமை நிறத்தில் ரசாயன புகையும் வெளியேறிறுவதுடன், அதிக சத்தமும் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சென்னை பசுமை தீர்ப்பாயத்தில் புகார் மனு அளிக்கப்பட்ட நிலையில், மனுவை தீர்ப்பாயம் கடந்த ஆண்டு செப்டம்பார் மாதம் 22ஆம் தேதி நிறுவனத்தை மூட உத்தரவு பிறப்பித்தும் 5 மாதமாக தொடர்ந்து செயல்பட்டு வந்ததையடுத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments