அம்ரித்பால் சிங்கின் சொந்த கிராமத்தில் ஆயுதப் புரட்சிக்கான பயிற்சி.. கைதான அம்ரித்பாலின் பாதுகாவலர் கோர்க்கா பாபாவிடம் விசாரணை!

0 1464

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை போலீசார் ஒருவாரமாகத் தேடி வரும் நிலையில், அவரது பாதுகாவலர் கோர்க்கா பாபா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அம்ரித்பாலின் சொந்த கிராமத்தில் இளைஞர்களுக்கு ஆயுதப் போராட்டம் நடத்துவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டதும், ஆயுதங்கள் தாராளமாக புழங்குவதும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அம்ரித்பால் டெல்லியில் நடமாடுவதாக கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தெரிய வந்துள்ளதையடுத்து போலீசார் அவரை வலைவீசித் தேடி வருகின்றனர். அம்ரித்பால் நேபாளத்துக்குத் தப்பிவிடாமல் இருக்க எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments