தென் சீனக் கடலில் அமெரிக்க போர்க்கப்பல் சட்டவிரோதமாக நுழைந்ததாக சீனா கூறிய குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த அமெரிக்கா

0 1244

தென் சீனக் கடலில் அமெரிக்க போர்க்கப்பல் சட்டவிரோதமாக நுழைந்ததாக சீனா கூறிய குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான அர்லீக் பர்க் வகை தாக்குதல் கப்பலான யு.எஸ்.எஸ் மிலியஸ் கடந்த சில தினங்களுக்கு முன், தென் சீன கடலில் ரோந்து வந்தது.

அதனை சீன கடற்படை சட் டத்தின்படி விரட்டி அடித்ததாகவும், இதனால் தென் சீன கடல் பிராந்தியத்தின் அமைதி மற்றும் நிலைத்தன்மையை குலைப்பதாகவும் சீனா குற்றம் சாட்டியிருந்தது.

இந்த நிலையில், யுஎஸ்எஸ் மிலியஸ் வழக்கமான ரோந்து பணியில் இருந்ததாகவும், சர்வதேச சட்டம் அனுமதிக்கும் இடங்களில் அமெரிக்கா தொடர்ந்து செயல்படும் என்றும் அமெரிக்க கடற்படையின் 7வது படைப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments