தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல்..!

0 4794

தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல்

சட்டப்பேரவையில் 2023-2024ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல்

எத்தனை தொழில்கள் செழித்து வளர்ந்தாலும் மனிதனின் அடிப்படை தேவை உணவு ஆகும் - அமைச்சர்

இயற்கையோடு ஆடக்கூடிய கண்ணாமூச்சி ஆட்டமாக வேளாண்மை மாறியிருக்கிறது - அமைச்சர்

விளைநில பரப்புகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன - அமைச்சர்

தானியங்கள் மட்டும் அல்ல காய்கறிகள் பழங்கள் போதிய அளவில் உற்பத்தி செய்து ஊட்டசத்தை பாதுகாப்பது அவசியம்

விளைநிலங்கள் அளவு குறைந்து வருகிறது; எனவே உற்பத்தி அதிகரிக்க வேண்டியது அவசியம்

புன்செய் நிலங்களுக்கும் உரிய பயிர்களை அறிமுகம் செய்ய வேண்டிய தேவை உருவாகியுள்ளது - அமைச்சர்

image

தமிழ்நாட்டின் சாகுபடி பரப்பு 63.43 லட்சம் ஹெக்டேர்

தமிழ்நாட்டில், தற்போது 63 லட்சத்து 43 ஆயிரம் ஹெக்டேராக சாகுபடி பரப்பு உள்ளது

உணவு உற்பத்தியில் தமிழ்நாடு சாதனை

image

119 லட்சத்து 97 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்து தமிழ்நாடு சாதனை

தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் உயர்வு

ஆறு ஏரிகளை தூர்வாரியதால் தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் அதிகரிப்பு

சாகுபடி பரப்பு 1.93 லட்சம் ஹெக்டேர் அதிகரிப்பு

தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பு 1.93 லட்சம் ஹெக்டேர் அதிகரித்துள்ளது

குறுவை சாகுபடி பரப்பும் அதிகரிப்பு

2022-23 நிதியாண்டில் டெல்டா மாவட்டங்களில் 5 லட்சத்து 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி அதிகரிப்பு

2 ஆண்டுகளில் 1.50 லட்சம் விவசாய மின் இணைப்பு

2 ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு, இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

2021-2022ல் வேளாண் உற்பத்தி அதிகரிப்பு

2020-2021ஆம் நிதியாண்டைக் காட்டிலும், 2021-2022ஆம் நிதியாண்டில், வேளாண் உற்பத்தி அதிகரித்துள்ளது

நெல், பயறு, கொப்பரை தேங்காய் நேரடி கொள்முதல்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம், நேரடி நெல் கொள்முதல் மட்டுமின்றி, பயறு, கொப்பரைத் தேங்காயும் கொள்முதல்

போதுமான அளவில் கிடங்குகள்

குளிர்பதன கிடங்கு, உலர் கலம் , தானிய பாதுகாப்பு கிடங்குகள் போதுமான அளவு அமைக்கப்பட்டன

ரூ.1695 கோடி பயிர் காப்பீடு மானியம்

ரூ.1695 கோடி அளவிற்கு பயிர் காப்பீடு மானியமாக 6 லட்சம் விவசாயிகளுக்கு மேல் வழங்கப்பட்டது

127 மெ.டன் உணவு தானிய உற்பத்தி இலக்கு

வரும் நிதியாண்டில் 127 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு

வேளாண் பட்டதாரிகளுக்கு மானியம்

2021-2022ஆம் நிதியாண்டில் 185 வேளாண் பட்டதாரிகளுக்கு தலா 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது

ரூ.230 கோடியில் கிராம வேளாண் வளர்ச்சி திட்டம்

image

2504 கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.230 கோடி ஒதுக்கீடு

சாகுபடி பரப்பு அதிகரிப்பு - விளக்கம்

ஆறுகள், கால்வாய்களில், தடுப்பணைகள், வயல் சாலைகள் அமைத்ததால் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது

ரேசனில் 2 கிலோ கேழ்வரகு வழங்கத் திட்டம்

நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்க திட்டம்

20 மாவட்டங்கள் - 2 சிறுதானிய மண்டலங்கள்

image

சிறு தானிய பரப்பை அதிகரிக்க 20 மாவட்டங்கள் அடங்கிய இரு சிறுதானிய மண்டலங்கள் அமைக்கப்படும்

நாமக்கல், திருப்பூர், ஈரோடு, புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் புதிதாக சிறு தானிய மண்டலங்களில் இணைக்கப்படும்

கிராம வேளாண் முன்னேற்ற குழு

5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம வேளாண் முன்னேற்ற குழு அமைக்கப்படும்

196 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விதைகள்

நெல் ஜெயராமன் மரபு பாதுகாப்பு இயக்கம் மூலம் 196 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்பட்டன

வேளாண் பட்டதாரிகள் தொழில்முனைவோராக...

வேளாண்மை தோட்டக்கலை பட்ட படிப்பு முடித்த பட்டதாரிகள், தொழில்முனைவோராக தலா 2 லட்சம் நிதி உதவி வழங்க 4 கோடி நிதி ஒதுக்கீடு

ரூ.26 கோடியில் இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு

விவசாயத்தில், ரசாயனம், உர பயன்பாட்டை குறைத்து, இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க 32 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.26 கோடி ஒதுக்கீடு

இயற்கை உரங்களை தயாரிக்க 100 குழுக்களுக்கு 1 லட்சம் வீதம் வழங்க, ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு

இலவச வண்டல் மண் - இந்தாண்டும் அனுமதி

ஏரி, குள வண்டல் மண்ணில் ஊட்ட சத்து இருப்பதால் விவசாயிகள் இவற்றை இந்த ஆண்டும் வயல்களுக்கு இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்

ரூ.50 கோடியில் அங்கக வேளாண்மை

நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மை திட்டம் ரூ.50 கோடியில் செயல்படுத்தப்படும்

மாற்று பயிர் சாகுபடிக்கு ரூ.38 கோடி

1 லட்சம் ஏக்கரில் மாற்று பயிர் சாகுபடிக்கு ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு

6 லட்சம் ஏக்கரில் நெல்லுக்குப் பின் மாற்றுப் பயிர் சாகுபடி செய்ய ரூ.24 கோடி நிதி ஒதுக்கீடு

சிறந்த இயற்கை விவசாயிக்கு நம்மாழ்வார் விருது

image

சிறந்த இயற்கை வேளாண் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நம்மாழ்வார் பெயரில் விருதுடன் ரூ.5 லட்சம் காசோலை

அங்கக வேளாண்மைக்கான பகுதிகள் கணக்கெடுப்பு

சென்னை தவிர பிற மாவட்டங்களில் அங்கக வேளாண்மைக்கு சாத்தியமான பகுதியை காண கணக்கெடுப்பு

அங்கக வேளாண்மையில் ஈடுபடுவோரை ஊக்குவிக்க நம்மாழ்வார் விருது - ரூ.5 லட்சம் பணப்பரிசு குடியரசு தினத்தில் வழங்கப்படும்

37 மாவட்டங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை

வேளாண் உற்பத்தி, கொள்முதல் உள்ளிட்டவற்றிக்காக, 37 மாவட்டங்களில் பணம் இல்லா பரிவர்த்தனையை விரிவுபடுத்த திட்டம்

மின்னணு வேளாண்மை திட்டத்தின் கீழ், 37 மாவட்டங்களில் பணம் இல்லா பரிவர்த்தனையை விரிவுபடுத்தப்படும்

355 வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் ரூ.2 கோடியில் மின்னணு உதவி மையங்கள் அமைக்கப்படும்

விவசாயிகளுக்கு தகவல் வழங்க WhatsApp குழுக்கள்

image

விவசாயிகளுக்கு தேவையான தொழில் நுட்பம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் கொண்டு செல்ல வட்டார அளவில் WhatsApp குழுக்கள்

26 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு

இயற்கை இடர்பாடுககளால் பாதிக்கபட்ட 40.74 லட்சம் ஏக்கர் பதிவு செய்த 26 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு

127 மெ. டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு

வரும் ஆண்டில் 127 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு

கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம்

ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து உழவர்களுக்கு தேவையான கட்டமைப்புகள் உருவாக்கம்

2,504 கிராமங்களில் ரூ.230 கோடி நிதியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டம்

15 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்படும்

image

2,504 கிராமங்களில் 300 குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள்

1.82 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீடு

பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட 1.82 லட்சம் விவசாயிகளுக்கு , ரூ.123.63 கோடி இழப்பீடு வழங்க அறிவிப்பு

நியாய விலைக்கடைகள் மூலம் சிறுதானிய விநியோகம்

விவசாயிகளிடம் இருந்து சிறுதானியங்களை நேரடியாக கொள்முதல் செய்து, நியாய விலைக்கடைகள் மூலம் விநியோகம் செய்ய திட்டம்

கம்பு, கேழ்வரகு, சாமை போன்ற சிறுதானியங்களை அதிகம் விளைவிக்கும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு

உணவு தானிய உற்பத்தியில் சிறந்து விளங்கும் மாவட்ட, வட்டார அலுவலர்களை ஊக்கப்படுத்த விருதுகள்

சிறுதானிய திருவிழா

சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சிறுதானிய திருவிழா நடத்தப்படும்

தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்

ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு

60,000 வேளாண் கருவிகள் தொகுப்பு.

image

சிறு - குறு விவாசாயிகள் மற்றும் நிலமற்ற தொழிலாளர்களுக்கு ரூ.15 கோடியில், 60,000 வேளாண் கருவிகள் தொகுப்பு வழங்கப்படும்

வேளாண் காடு திட்டம்

image

வேளாண் காடு திட்டம் மூலம் விவசாயிகளுக்கு 75 லட்சம் செம்மரம், தேக்கு,சந்தனம் முழு மானியத்தில் வழங்க 15 கோடி ஒதுக்கீடு

SC- ST விவசாயிகளுக்கு கூடுதல் மானியம்

ஆதி திராவிட, பழங்குடியின சிறு - குறு விவாசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியம்

ஆதி திராவிட சிறு - குறு விவாசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு

பழங்குடியின சிறு - குறு விவாசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு

ஒரு தளம் ஒரு பயன் திட்டம்

பல்வேறு துறைகளின் திட்டப் பலனை விவசாயிகள் ஒரே இடத்தில் பெற உதவும் வகையில், ஒரு தளம் ஒரு பயன் திட்டம் அமல்

13-க்கும் மேற்பட்ட துறைகளின் திட்டப் பலன் இந்த இணைய தளம் மூலம் கிடைக்கும்

ஒருங்கிணைந்த பண்ணையம்

கறவை மாடு, ஆடுகள், கோழி, தீவனப் பயிர், பழ மரங்கள், மரக் கன்றுகள், தேனீக்கள், மண்புழு உரம், பண்ணைக் குட்டை நீர் வளர்ப்பு

இவை அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து, ரூ.50,000 மானியம் வழங்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு

Grains (One Stop Solution) இணையதளம்

உழவர் நலன்சார்ந்த தகவல்களை கணினி மயமாக்கி Grains (One Stop Solution) இணையதளம் அறிமுகம்

எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிக்க நிதி

எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், சூரிய காந்தி, நிலக்கடலை, எள், சோளப் பயிர் சாகுபடியை பரவலாக்க ரூ.33 கோடி ஒதுக்கீடு

எண்ணெய் வித்து சிறப்பு மண்டலம்

எண்ணெய் வித்து விதைகள், மற்றும் உற்பத்தி கொள்முதலுக்காக, சிறப்பு மண்டலம் உருவாக்கப்படும்.

ரூ.20 கோடியில் தென்னை வளர்ச்சி மேம்பாடு

தென்னை உற்பத்தியில் தமிழ்நாடு, தேசிய அளவில்முதல் இடம் பெற ஏதுவாக நடவடிக்கை - ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு

குட்டை, நெட்டை தென்னங்கன்று

குமரி புத்தளம், செங்கோட்டை, தேவதானம் தென்னை நாற்று பண்ணையில் கூடுதலாக தலா 10 ஆயிரம் குட்டை, நெட்டை தென்னங் கன்றுகள் உற்பத்தி

பயிர்காப்பீடு- ரூ.2337 கோடி நிதி ஒதுக்கீடு

வேளாண் பயிர்காப்பீட்டு மானியத்திற்காக, மாநில அரசின் பங்காக, ரூ.2337 கோடி நிதி ஒதுக்கீடு

உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.O

image

3 அல்லது 4 கிராமங்களுக்கு தலா, ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமனம்

4311 வேளாண் விரிவாக்க அலுவலர்கள் 4 கிராமங்களுக்கு ஒருவர் என நியமிக்கப்பட்டு திட்டத்தை செயல்படுத்துவர்

விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்பங்கள், திட்ட பயன்கள் குறித்த விவரங்களை எடுத்துச் செல்ல உழவர் அலுவலர் தொடர்பு திட்டம்

கரும்பு சிறப்பு ஊக்கத்தொகை ரூ.2946ஆக அதிகரிப்பு

கரும்பு டன்னுக்கு ரூ.2751 கொடுக்கப்பட்டது; சிறப்பு ஊக்கத்தொகை கூடுதலாக ரூ.195 சேர்க்கப்பட்டு வழங்கப்படும்; இதற்காக, ரூ.253 கோடி நிதி ஒதுக்கீடு

கரும்பு கொள்முதலுக்கான சிறப்பு ஊக்கத் தொகை மூலம் 1.50 லட்சம் கரும்பு விவசாயிகள் பலன் பெறுவர்

கோயம்புத்தூரில் கருவேப்பிலை தொகுப்பு

5 ஆண்டுகளில், 1500 ஹெக்டேரில் கருவேப்பிலை சாகுபடியை அதிகரிக்கும் வகையில், ரூ.2.5 கோடி ஒதுக்கீடு

அதிக அளவில் அங்கக இடு பொருட்கள் பயன்படுத்தி கருவேப்பிலை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு தொழில் நுட்ப ஆலோசனைகள்

மதுரையில் மல்லி தொகுப்பு ஏற்படுத்தப்படும்

மதுரை மல்லிக்கு ஓர் இயக்கமாக, மதுரையில் மல்லிக்கு பிரத்யேக தொகுப்பு ஏற்படுத்தப்படும்

பருவம் இல்லா காலங்களிலும் மதுரை மல்லி உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை

இராமநாதபுரத்தில் மதுரை மல்லிகைக்கு தேவையான செடிகள் உற்பத்தி செய்யப்படும்

மல்லிகை பயிர் சாகுபடி பயிற்சிக்கு நிதி

மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் மல்லிகை விவசாயிகளுக்கு ரூ.7 கோடியில் பயிற்சி

சீமை கருவேலம் அகற்றப்பட்டு மிளகாய் சாகுபடி

1000 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு மிளகாய் சாகுபடி செய்ய நடவடிக்கை

தென் மாவட்டங்களில் மிளகாய் மண்டலம்

இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிளகாய் உற்பத்தியை அதிகரித்து, மிளகாய் மண்டலம் ஏற்படுத்தப்படும்

வருடம் முழுவதும் தக்காளி, வெங்காயம் உற்பத்தி

பருவ காலம் அல்லாத காலங்களிலும், தக்காளி, வெங்காயம் சாகுபடியை ஊக்குவித்து, ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்ய நடவடிக்கை.

தக்காளி, வெங்காயம் சீராக கிடைக்க ரூ.48 கோடி

தக்காளி ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க ரூ.19 கோடி; வெங்காயம் ஆண்டு முழுவதும் கிடைக்க ரூ.29 கோடி நிதி ஒதுக்கீடு

பேரீட்சை, அத்தி உற்பத்திக்கு நடவடிக்கை

பேரீட்சை, அத்தி உள்ளிட்ட சிறப்பு தோட்டக் கலை பயிர்களை உற்பத்தி செய்ய நடவடிக்கை;

1000 ஹெக்டேரில் சாகுபடி செய்ய பயிற்சி; ரூ.2 கோடி நிதி

டிராகன் ஃபுரூட், அவகோடா உற்பத்திக்கு நடவடிக்கை

டிராகன் ஃபுரூட், அவகேடா, லிச்சி போன்ற பழங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 1,000 ஹெக்டேரில் சாகுபடிக்கு நடவடிக்கை

10 லட்சம் வேளாண் குடும்பங்களுக்கு பேரீட்சை, டிராகன் ஃபுரூட், அவகோடா, அத்தி பழ சாகுபடி பயிர்கள் வழங்கப்படும்

பயறு பெருக்கத் திட்டம்

உடலுக்கு தேவையான புரதச்சத்தை வழங்கும் பயறு வகைகளின் பரப்பளவையும், உற்பத்தியையும் அதிகரிக்க ரூ.30 கோடி மதிப்பில் திட்டம்

4 மாவட்டங்களில் ரூ.18 கோடியில் துவரை மண்டலம்

கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய 4 இடங்களில், ரூ.18 கோடி நிதியில் துவரை மண்டலம் அமைக்கப்படும்

ரூ.12 கோடியில் பருத்தி இயக்கம்

நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் வகையில் ரூ.12 கோடி நிதியில் பருத்தி இயக்கம்

வட்டாரத்திற்கு ஒரு வேளாண் விஞ்ஞானி

பயிர் சாகுபடி முதல் விற்பனை வரையிலான, தொழில்நுட்பம் பற்றிய சந்தேகங்களை விவசாயிகளுக்கு விளக்க வேளாண் விஞ்ஞானிகள் திட்டம்

கரும்பு சாகுபடி பரப்பு அதிகரிப்பு

கடந்த நிதியாண்டில் கரும்பு சாகுபடி பரப்பு 55 ஆயிரம் ஹெக்டேர் அதிகரிப்பு

கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் உட்கட்டமைப்பு மேம்பாடு

7 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் உள்ள கரும்பு தளங்கள் சிமெண்ட் தளங்களாக அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

கழிவில் இருந்து இயற்கை உரம்

சேலம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கழிவு மண்ணிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட இயற்கை உரங்கள் தயாரிக்க ரூ.3 கோடி நிதி

கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டம்

குறைந்த சாகுபடி செலவில் அதிக மகசூல் எடுக்க, கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

பலா தொடர்பான பன்னாட்டு கருத்தரங்கு

2,500 ஹெக்டேர் பரப்பளவில் பலா சாகுபடி செய்ய திட்டம்

பலா தொடர்பான பன்னாட்டு கருத்தரங்கு நடத்தப்படும்

பலா இயக்கம்

பண்ருட்டி பலாவிற்கு ஒருங்கிணைந்த தொகுப்பு அமைத்து, பகுதிகளுக்கு ஏற்ப பல ரகங்களை அறிமுகம் செய்ய திட்டம்

கடலூர், கன்னியாகுமரி உட்பட 21 மாவட்டங்களில் பலா சாகுபடியினை, அடுத்த 5 ஆண்டுகளில் 2,500 ஹெக்டரில் உயர்த்திட ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு

முருங்கை இயக்கம்

image

முருங்கை ஏற்றுமதி மண்டலம் அமைத்து 1,000 ஹெக்டரில் முருங்கை சாகுபடியை உயர்த்திட ரூ.11 கோடி ஒதுக்கீடு

கரூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, அரியலூர், மதுரை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி முருங்கை ஏற்றுமதி மண்டலம்

குளிர்கால காய்கறிகளின் சாகுபடிக்கு மானியம்

1,000 ஹெக்டேரில் செள செள, பட்டாணி, பீன்ஸ் போன்ற குளிர்கால காய்கறிகளின் சாகுபடிக்கு மானியமாக ரூ.2.5 கோடி ஒதுக்கீடு

நுண்ணீர் பாசனம் - ரூ.450 கோடி நிதி

தண்ணீர் பற்றாக்குறையுள்ள பகுதிகளில் 53,400 ஹெக்டேர் நுண்ணீர் பாசனம் நிறுவ மானியமாக ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு

பாதுகாக்கப்பட்ட சாகுபடி - ரூ.22 கோடி

பாதுகாக்கப்பட்ட சாகுபடி முறையை பரவலாக்க ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு

விவசாயிகளுக்கு அயல்நாட்டில் பயிற்சி

வெளிநாட்டு தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டு தமிழ்நாட்டில் பின்பற்றும் வகையில், விவசாயிகள் வெளிநாட்டில் பயிற்சி பெற ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு

வேளாண் குடும்பங்களுக்கு பழச்செடி தொகுப்பு

வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், மா, கொய்யா, பலா, சீதாப்பழம் போன்ற பழச்செடி தொகுப்புகள் வழங்கத் திட்டம்

ஒவ்வொரு கிராமங்களிலும் தலா 300 வேளாண் குடும்பங்களுக்கு பல்லாண்டு பழச்செடி தொகுப்புகள் வழங்க, ரூ15 கோடி நிதி ஒதுக்கீடு

ரூ.10 கோடியில் பூங்காக்கள் அலங்கரிப்பு

ஏற்காடு தாவரவியல் பூங்கா, மாதவரம் தோட்டக்கலைப் பூங்காவில், தலா ரூ.5 கோடியில், அலங்காரங்கள் அமைப்பு

பள்ளி மாணவர்களுக்கு பண்ணை சுற்றுலா

image

பள்ளி மாணவ, மாணவிகளிடம் வேளாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பண்ணை சுற்றுலா அறிமுகம்; ரூ.1 கோடி நிதி

வாழைக்காக ரூ.130 கோடியில் தனித்தொகுப்பு

image

உலக சந்தையில் தேனி வாழைக்கு தனி அடையாளம் உருவாக்கிட ரூ.130 கோடியில் தனித்தொகுப்பு

கூலிஆள் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை

வேளாண் பணிக்கான வேலை ஆட்கள் தட்டுப்பாட்டை போக்க வேளாண் இயந்திரங்கள் பயன்பாடு அதிகரிக்கப்படும்

பல்வேறு வேளாண் பணிகளுக்கு பயன்படும் இயந்திரங்களை மானியத்தில் வழங்க ரூ.125 கோடி ஒதுக்கீடு

இயந்திரங்களை இயக்க, பழுதுநீக்க பயிற்சி

டிராக்டர், நெல் அறுவடை எந்திரம் உள்ளிட்டவற்றை இயக்க, 500 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு

வேளாண் இயந்திரங்களை கிராமங்களிலேயே பழுது பார்க்க 200 ஊரக இளைஞர்களுக்கு ரூ.50 லட்சம் செலவில் பயிற்சி

டெல்டாவில் 2ஆம் கட்ட தூர்வாரும் பணி

டெல்டா மாவட்டங்களில் காவிரி, வெண்ணாறு பாசனப் பகுதிகளில் 2ஆம் கட்ட தூர்வாரும் பணிகள்

கடைமடைக்கும் தண்ணீர் செல்லும் வகையில், 1146 கி.மீ வாய்க்கால்கள், கால்வாய்கள் இந்தாண்டும் தூர்வாரப்படும்

"ஒரு கிராமத்திற்கு தலா 2 பவர் டில்லர்கள்"

வேளாண்மை நடைபெறும் கிராமங்களில், ஒரு கிராமத்திற்கு தலா 2 பவர் டில்லர்கள் வழங்கப்படும்

கிராமங்களுக்கு தலா 2 வீதம் 5 ஆயிரம் பவர் டில்லர்கள் வழங்க ஏதுவாக, ரூ.43 கோடி நிதி ஒதுக்கீடு

10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி

கிருஷ்ணகிரி அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா உள்ளிட்டவற்றிற்கு புவிசார் குறியீடு பெற முயற்சி

சாத்தூர் வெள்ளரி, தஞ்சாவூர் வீரமாங்குடி அச்சுவெள்ளம் உள்ளிட்டவற்றிற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை

தூத்துக்குடி விளாத்திகுளம் மிளகாய், கடலூர் கோட்டைமலை கத்திரி உள்ளிட்டவற்றிற்கு புவிசார் குறியீடு பெற முயற்சி

மதுரை செங்கரும்பு, சிவகங்கை கருப்பு கவுனி அரிசி உள்ளிட்டவற்றிற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை

வேளாண் பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்று உலக அளவில் சந்தையில் இடம் பெற செய்தால் அதன் மதிப்பு அதிகரிக்கும்.

25 உழவர் சந்தைகளில் தொன்மைசார் உணவகங்கள்

25 உழவர் சந்தைகளில் தொன்மைசார் உணவகங்கள் அமைக்கப்படும்

50 உழவர் சந்தைகளுக்கு உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சான்று பெற நடவடிக்கை

தாய்லாந்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

image

தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உட்பட வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்

பாரம்பரிய காய்கறிகளை பரவலாக்க திட்டம்

மாவட்டங்கள் தோறும் விதை திருவிழா கருத்தரங்கு, மீட்டெடுத்த விவசாயிகளுக்கு பரிசு தொகை வழங்க திட்டம்

வரும் ஆண்டில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த திட்டம்

முந்திரி சாகுபடி மேம்பாடு திட்டம்

முந்திரி சாகுபடி வரும் ஆண்டு கூடுதலாக 550 ஹெக்டேர் அதிகரிக்க திட்டம்

உயர் விளைச்சல் ரக முந்திரி செடிகளை 500 ஹெக்டரில் நடவு செய்ய நடவடிக்கை

10 லட்சம் பனை விதைகள்

பனை சாகுபடியை அதிகரிக்க 10 லட்சம் பனை விதைகள் வழங்கப்படும் என அறிவிப்பு

விவசாயிகளுக்கு பனை மதிப்பு கூட்ட பாதுகாப்பு உபரகணங்கள்,கொட்டகை அமைக்க நிதி உதவி

தூத்துக்குடியில் பனை ஆராய்ச்சி நிலையம்

தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளத்தில் ரூ.15 கோடியில் பனை ஆராய்ச்சி நிலையம்

பனை மேம்பாட்டுத் திட்டம்

பனை சாகுபடியினை ஊக்குவித்து பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு

வைகை, மேட்டூர் அணை - ரூ.6 கோடி

வைகை, மேட்டூர் அணைகளை மேம்படுத்தி பராமரிக்க, ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு

கடைமடை வாய்க்கால்களை தூர்வார ரூ.5 கோடி

1.32 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பயன்பெறும் வகையில், கடைமடை வரை பாசன நீர் செல்ல ஏதுவாக வாய்க்கால்களை தூர்வார ரூ.5 கோடி நிதி

உழவன் செயலி

உழவன் செயலியில், தனியார் இயந்திரங்கள், பழுது நீக்குவோர் பெயர், விலாசம், கைபேசி எண் விவரங்கள் வட்டார, மாவட்ட வாரியாக இடம்பெறும்

வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் - ரூ.50 கோடி

100 வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை புதுப்பிக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு

புவிசார் குறியீடு பெற நடவடிக்கை

image

கிருஷ்ணகிரி அரசம்பட்டி தென்னை, பன்னீர் ரோஜா, மூலனூர் குட்டை முருங்கை உட்பட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை

மதுரை செங்கரும்பு, பேராவூரணி தென்னை உட்பட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை

மின்னணு மாற்றத்தகு கிடங்கு ரசீது

150 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள், சேமிப்பு கிடங்குகள், 25 குளிர்பதன கிடங்குகளில் மின்னணு மாற்றத்தகு கிடங்கு ரசீது முறை அமல்

இ-நாம் திட்டம் - ரூ.9 கோடி

30 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை ரூ.9 கோடி மதிப்பீட்டில், மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்துடன் இணைக்கப்படும்

பூச்சிகள் அருங்காட்சியகம் மேம்பாடு

கோயம்புத்தூர் வேளாண் பல்கலைகழகத்தில் உள்ள பூச்சிகள் அருங்காட்சியகம் ரூ.3 கோடியில் மேம்பாடு

ரூ.14,000 கோடி கூட்டுறவு பயிர்கடன்

image

வரும் ஆண்டில் விவசாயிகளுக்கு, கூட்டுறவு பயிர்கடனாக ரூ.14,000 கோடி வழங்கப்படும்

காவிரி படுகை பெரும் திட்டம் - ரூ.1,000 கோடி

காவிரி படுகை பெரும் திட்டத்திற்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்படும்

காவிரி பாசன கால்வாய் - ரூ.100 கோடி

காவிரி பாசன ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்வாய்களை தூர்வார ரூ.100 கோடி ஒதுக்கீடு

25 உழவர் சந்தைகளில் தொன்மைசார் உணவகங்கள்

25 உழவர் சந்தைகளில் தொன்மைசார் உணவகங்கள் அமைக்கப்படும்

50 உழவர் சந்தைகளுக்கு உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சான்று பெற நடவடிக்கை

தமிழ்நாடு வேளாண் பல்கலை.க்கு ரூ.530 கோடி

1971ல் கலைஞர் கருணாநிதி தொடங்கிய தமிழ்நாடு வேளாண்மை பல்கலை.க்கு ரூ.530 கோடி நிதி ஒதுக்கீடு

மேலும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு ரூ.100 கோடி நிரந்தர மூலதன வைப்பு நிதியாக வழங்கப்படும்

கோயம்புத்தூர் தாவரவியல் பூங்கா சீரமைப்பு

கோயம்புத்தூர் பல்கலைக்கழக தாவரவியல் பூங்காவை சீரமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு

ரூ.15 கோடியில் வாழை ஆராய்ச்சி மையம்

கிள்ளிகுளம் வேளாண் கல்லூரியில் ரூ.15 கோடியில் வாழை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்

தென் மாவட்டங்களில் 22,000 ஹெக்டேரில் வாழை

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் 22,000 ஹெக்டேரில் வாழை சாகுபடி

கூடுதல் ஊக்கத்தொகையுடன் நெல் கொள்முதல்

சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு, ரூ.100 கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு கொள்முதல் செய்யப்படும்

பொது ரக நெல் குவிண்டாலுக்கு, ரூ.75 கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு கொள்முதல் செய்யப்படும்

சன்னரக, பொதுரக நெல் கொள்முதலுக்கு கூடுதல் ஊக்கத்தொகை வழங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு

கால்நடை பசுந்தீவனங்களை அதிகரிக்க நடவடிக்கை

கால்நடைகளுக்கு பசுந்தீவனங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

தென்னை உள்ளிட்ட தோட்டங்களில் பசுந்தீவன பயிர்களை ஊடுபயிராக உற்பத்தி செய்ய ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு

கால்நடைகளுக்கான பசுந்தீவன உற்பத்தியை அதிகரிப்பதோடு, மேய்ச்சல் நிலங்களையும் அதிகரிக்க நடவடிக்கை

ஊட்டச்சத்து மிகுந்த தீவன பயிர்கள் உற்பத்தி செய்ய 60 வேளாண்மை கால்நடை பராமரிப்பு அலுவலர்களுக்கு பயிற்சி

ஆடு,மாடு,கோழி,மீன் வளர்ப்புக்கு வட்டியில்லா கடன்

image

ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்புக்கு வட்டியில்லா கடன் வழங்க ஏதுவாக, ரூ.1500 கோடி ஒதுக்கீடு

வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம், வட்டியில்லா கடன் வழங்க ஏதுவாக, ரூ.1500 கோடி ஒதுக்கீடு

நாட்டின மீன் வளர்ப்புக்கு ரூ.2 கோடி

நாட்டின மீன் வளர்ப்பை ஊக்குவித்து உற்பத்தியை பெருக்கிட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு

விவசாய இலவச மின்சாரத்திற்கு ரூ.6536 கோடி

image

23 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை; ரூ.6536 கோடி ஒதுக்கீடு

மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தேன் உற்பத்தி

மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தேன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

வனவிலங்குகளால் பயிர்சேதம்-கணக்கெடுக்கத் தனிக்குழு

யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளிடமிருந்து பயிர்களை காக்க சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க தனி குழு

சந்தனம், செம்மரங்களை வெட்ட எளிய நடைமுறை

பசுமை தமிழக இயக்கம் மூலம் சந்தனம், செம்மரம் தேக்கு இலவசமாக வழங்கப்படுகிறது

சந்தனம், செம்மரம், தேக்கு மரங்களை வெட்டுவதற்கான வழிமுறைகளை எளிதாக்க வனத்துறை மூலம் நடவடிக்கை

கடந்தாண்டை விட ரூ.5897 கோடி கூடுதல் நிதி

சென்ற ஆண்டு ரூ.33007 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது...இவ்வாண்டு கூடுதலாக ரூ.5897 கோடி நிதி ஒதுக்கீடு

வேளாண்மை துறை திட்டங்கள், அறிவிப்புகளுக்காக நடப்பாண்டில் ரூ.38904 கோடி நிதி ஒதுக்கீடு

வேளாண்மைக்கு பணியாளர் பற்றாக்குறை சவால்

வேளாண் தொழிலுக்கு பணியாளர் பற்றாக்குறை சவாலாக உள்ளது - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை வேளாண் பணிக்கு ஒதுக்க முன்வர வேண்டும் - அமைச்சர் வேண்டுகோள்

வேளாண் மேலாண்மை பணி - ரூ.6,600 கோடி

ரூ.6,600 கோடியில் ஊரக வளர்ச்சி துறையுடன் இணைந்து விவசாயம் சார்ந்த இயற்கை வள மேலாண்மை பணிகள்

தடுப்பணைகள், பண்ணை குட்டைகள், கால்வாய்கள் தூர்வாருதல் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படும்

ஊரக சாலைகள் - ரூ.710 கோடி

ரூ.710 கோடியில், கிராமங்களில் 2, 750 கிலோ மீட்டருக்கு ஊரக சாலைகள் அமைக்கப்படும்

சிறுதானிய சிற்றுண்டி

image

அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மதி - பூமாலை வளாகத்திலும் சிறுதானிய பொருட்கள் விற்பனை

வருவாய் பேரிடர் மேலாண்மை

அனைத்து மாவட்ட விவசாயிகள் எண்ணிக்கை, சாகுபடி விவரம் மின்னணு முறையில் சேகரிப்பு

விவசாயிகள் மண் வளம் குறித்து அறிய அனைத்து விவரமும் கணினி மயமாக்கம்

உணவு பதப்படுத்துதல் - தனிக்கொள்கை

தனியார் தொழில் முனைவோருக்கு சலுகைகள், ஊக்கத்தொகை, மானியங்கள் வழங்கும் உணவு பதப்படுத்துதல் கொள்கை மறுசீரமைக்கப்படும்

தஞ்சையில் வட்டார புத்தொழில் மையம்

காவிரி டெல்டா மாவட்டங்களில் வேளாண்மை சார்ந்த தொழில் நிறுவனங்கள் அமைக்கப்படும்

திருச்சி - நாகைக்கு இடையே, ரூ.1,000 கோடியில் வேளாண் தொழில் பெருந்தடம் திட்டம் செயல்படுத்தப்படும்

தொகுதி மேம்பாட்டு நிதி - அமைச்சர் வேண்டுகோள்

சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை, வேளாண் பணிக்கு ஒதுக்க முன்வர வேண்டும் என அமைச்சர் வேண்டுகோள்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments